துபாயில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமை – சுகாதார ஆணையம் அறிவிப்பு

துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் அவரை கடைசியாக சந்தித்த நாளில் இருந்து கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதில் அந்த நபருக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்றாலும் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும். இந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? அல்லது அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை தாங்களாகவே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற அறிகுறிகள் தனிமைப்படுத்தும் காலத்தில் தெரிய வந்தால் மீண்டும் அந்த நபர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.

 

Translate »
error: Content is protected !!