தெரியாமல் பேசிவிட்டேன்.. ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு தாக்கல்

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், என்னைப் பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதால் ஏற்படும் மன அழுத்தத்தால் பட்டியலின சமுதாயத்தை பற்றி தவறாக சித்தரித்துள்ளேன். அது தவறு என்று தெரிந்ததும், அவ்வாறு கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்டேன். பல படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், நான் கைது செய்யப்பட்டதால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

Translate »
error: Content is protected !!