தேனியில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம்

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற ஒரே கிராமத்தில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓடைப்பட்டி, வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கள ஆய்வு செய்தார்.

இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான .பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் .பி.ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, எம்.எல்.ஏக்கள் கம்பம்ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டிமகாராஜன், பெரியகுளம்சரவணக்குமார் மற்றும் சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தேனி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு சராசரியாக 800ஆக இருந்த நிலையில் தற்போது கட்டுக்குள் வந்து 500க்குள் இருக்கின்றது. முதல்வரின் அறிவுறத்தலின்படி மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்க வேண்டும் என்பதற்கேற்ப தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்தெந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன், .சி.யு மற்றும் சாதரன படுக்கைகள் எவ்வளவு காலியாக உள்ளன என்பது குறித்து இணையதள செயலி வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அரசு மருத்துவக்கல்லலூரி மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஜூரோ டிளே வார்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவுக்கேற்ப தேனியிலும் 10படுக்கைள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்கக் கூடாது என்ற உத்தரவுக்கினங்க உதவி மையம் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு நேரடியாக அல்லாமல் உறவினர்கள் உதவி புரியலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் துணை முதல்வர் .பி.எஸ் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கிணங்க தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தற்போது இயங்கி வரும் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையத்தினை 20,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையமாக உருவாக்கிட விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஓடைப்பட்டி, இராஜதானி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும் எனத் nதிவித்தார்.

இது தவிர 50செறிவூட்டிகள் இந்த வாரத்திற்குள் தேனி மாவட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தேனி மாவட்டத்தில் 74சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய 260க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்;ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய் சிகிச்சைக்காக தேனி மாவட்டத்தில் தற்போது 7தனியார் மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 3தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களின் நலன் கருதி முதலமைச்சரின் காப்பீடுத் திட்டம் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் செல்லுபடியாகும் என்று மருத்துவமனைகளின் முகப்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளன.

 தொடர்ந்து பேசிய அவர், 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பெறப்பட்ட 80லட்சம் தடுப்பூசிகள் முழுவதும் போடப்படும் தருவாயில் உள்ளன. 18 முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ரூ.85கோடியே 47லட்சம் மதிப்பில் 26லட்சம் தடுப்பூசிகள் தமிழக அரசின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும்  அனுப்பி வைக்கப்பட்டு முதற்கட்டமாக கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் கிடைத்தவுடன் முகாம் அமைத்தும், தேவைப்பட்டால் வீடுகள் தோறும் சென்று வழங்கப்படும். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே அரசின் நிலை.

துமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்கின்ற நிலையை உருவாக்குவதே அரசின் கொள்கை. தமிழகத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக டெல்லியில் டி.ஆர்.பாலு முகாமிட்டுள்ளார். மத்திய அரசை குறை சொல்லும் சூழ்நிலை தற்போது இல்லை. மூன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியிருக்கிறது. இதற்கான டென்டர் ஜூன் 6ஆம் தேதிக்குள் முடிவுற்று தேர்ந்தெடுக்கப்படுவர்களால் 6மாதத்திற்குள் தடுப்பூசி பெறப்படும். நிச்சயமாக 6மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும் என்றார்.

கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 100 மருத்துவமனைகள் திறக்க திட்டமிட்டு தற்போது 37 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. அதில் சித்தா மட்டுமல்லாது ஹோமியோபதி ஆயுர்வேதம் யுனானி மருத்துவ முறை சிகிச்சைகள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள நினைப்பவர்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து நோய்த்தொற்றை இலவசமாக குணப்படுத்திக் கொள்ளலாம். எனத் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!