தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு லீவு கிடையாது – டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

சென்னை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு லீவு கிடையாது என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறையினருடன் இணைந்து தேர்தல் பறக்கும்படையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடையும் வரை காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு விடுமுறை மற்றும் பர்மிஷன் கிடையாது என டிஜிபி திரிபாதி நேற்று வெளியிட்டுள்ள தனது உத்தரவில் கூறியுள்ளார்

 

Translate »
error: Content is protected !!