பயன்படுத்தப்பட்ட எண்ணையை பயோ டீசல் ஆக்கும் திட்டம் தொடக்கம்

சமையலுக்கு பயன் படுத்திய எண்ணெய் வாங்குவதற்கு அங்கீகரிக்கபட்ட நிறுவனமான என்வோ க்ரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையில் உள்ள ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் புற்று நோய்,இதயபாதிப்பு, உடல்பருமன் உள்ளிட்ட பல வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சார்பில் பெட்ரோலிய துறைஉடன் இணைந்து, உபயோகம் ஆன எண்ணையை பயோ டீசலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் 33 பயோ டீசல் தயாரிப்பாளர்களுக்கு 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாவட்டத்தில் envogreen energy நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி எண்ணையில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தொடங்கி வைத்தார். இதில் உணவு பாதுகாப்பு துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர் டாக்டர்சதீஷ் குமார், என்வோக்ரீன் நிறுவனர் செங்கதிர்பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!