பிரபல பாலிவுட் நடிகர் மீது வழக்கு பதிவு..!

ஊரடந்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தடையை மீறி வெளியே சுற்றிய பிரபல பாலிவுட் நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை (Disha Patani) திஷா பதானியும், அவரின் காதலன் பிரபல பாலிவுட் நடிகர் (Tiger Shroff ) டைகர் ஷெராபும்  தடையை மீறி வெளியே சுற்றியதாக இவர்கள் இருவரும் மீதும் மும்பை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றியதாகவும், இதை குறித்து போலீசார் விசாரித்த போது சரியான காரணத்தை தெரிவிக்காததால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Translate »
error: Content is protected !!