புளியந்தோப்பு கட்டிட முறைகேடு.. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை குடிசை மாற்று வாரிய அமைச்சர் தாமோ அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியதாவது:-

புளியந்தோப்பு கட்டிட முறைகேடு தொடர்பான விசாரணையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரக் கட்டுப்பாட்டு குழுவினால் ஆய்வு செய்யப்படும் என அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!