பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் * இன்ஸ்பெக்டருக்கு டிஐஜி பாராட்டு

பெண்ணை திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றார். பின்னர் அவரை அவரை திருமணம் செய்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் வீட்டார் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதைய ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் உரிய சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த 7 ஆண்டுகளாக கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை நடந்து முடிந்த நிலையில் குற்றவாளி மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்கள்
முத்துலட்சுமி, லட்சுமிபிரபா, நீதிமன்ற காவலர் தேன்மொழி ஆகியோரை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி நற்சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!