பெரிகுளத்தில் 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம்…இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புட இயங்கி வருகிறது

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம், இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து மொத்தமுள்ள 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது அதிலும் அண்ணா தொழிற்சங்க பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் மட்டுமே பணிக்கு வந்துள்ள நிலையில் 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் பேருந்துகள் இயக்கப்படுவது தடுக்கும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வரக்கூடும் என்பதால் அரசுப் பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு பேருந்து ஊழியர்களின் போராட்டம் குறைந்த அளவில் பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் பேருந்து இல்லாமல் பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்

 

Translate »
error: Content is protected !!