பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்துகளை நாள்தோறும் மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில், இன்று பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தடுப்பு மருந்து செலுத்தும் முகாம் அமைக்கப்பட்டது.

நோய் தொற்றும் தடுப்பு மருந்தும் செலுத்தும் பணிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார் துவக்கி வைத்தார். நோய்தொற்று தடுப்பு மருந்துகளை செலுத்தி கொள்வதற்காக பொதுமக்கள் காலை 8 மணி முதலே அதற்காக ஒதுக்கப்பட்ட தனியார் திருமண மண்டபங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டு ஆர்வமுடன் காத்திருந்தனர்.

முன்னதாக தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நோய்க்கு தடுப்பு மருந்தினை வருகின்றனர்.இதில் திமுக ஒன்றிய செயலாளர் பெரிய பாண்டி நகர செயலாளர் முரளி கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்

 

Translate »
error: Content is protected !!