பெரியகுளத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைப்பு

பெரியகுளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் , விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைத்து வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் வியாபாரிகள் சங்கம் காவல்துறையினர் சார்பில் பெரியகுளம் தென்கரை காந்தி சலை அருகே பொதுமக்களுக்கு இலவச முககவசம் மற்றும் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி கலந்து கொண்டு , பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பெரியகுளம் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேலு , பெரியகுளம் தென்கரை ஆய்வாளர் சுகுமார் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!