போலீசார் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது ஏன்..? காரணத்தை தெரிவிக்க வேண்டும் – கமிஷனர் உத்தரவு

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலைக்கு, உதவி கமிஷனர், எஸ்.., மற்றும் போலீசார் என, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 500க்கும் மேற்பட்ட போலீசார், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, போலீசார் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில், இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். முறையான காரணம் இன்றி தாமதப்படுத்தும் போலீசாருக்கு, ‘மெமோஅளிக்கப்படும் என, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!