மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய் லோன் மோசடி – பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் லோன் பெற்று தொண்டு நிறுவனம் மோசடி. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இமை என்ற தொண்டு நிறுவனத்தை ராஜ்குமார் எனபவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த தொண்டு நிறுவனம் மூலாம் பல்வேறு மகளீர் சுய உதவிக்குழுக்களை வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம் உள்ளிட்ட

பகுதியில் ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கிகளில் கடன் தொகை பெற்று வழங்கி வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு மேல்மங்களம், காமக்கபட்டி, ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட மகளீர் சுய உதவிக் குழுக்களை உறுவாகியதாகவும்,

அவர்களிடம் இருந்து ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவங்களை பெற்று வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி வாங்கி சென்ற நிலையில் 70 குழுக்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடன் பெற்று தராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடன் பெறாத பெண்களுக்கு கடன் பெற்றதாக  வழக்கறிஞர் நோட்டிஸ் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பெண்கள் கடன் வாங்காமல் வங்கியில் கடன் பெற்றதாகவும், கடனை கட்ட உத்தரவிட்டு நோட்டிஸ் வந்த நிலையில் அதிர்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெயிரில் முறைகேடாக கடன் பெற்ற இமை தொண்டு நிறுவன ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளிரம் புகார் கொடுத்த 6 நாட்கள் ஆன நிலையில் நடவடிக்கை எடுகாததால்

இன்று பெரியகுளம் கோட்ட ஆட்சியிஅர் அலுவலம் முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வ்ந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் முறை கேட்டில் ஈடுபட்டுள்ள இமை தொண்டு நிறுவன இயக்குநர் ராஜ்குமாரை கைது செய்ய உரிய நட்வடிக்கை எடுத்து வருவதாகவும், மோசடி குறித்த விசாரணை தேதி மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினரால் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் இருந்த பெண்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!