மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மருத்துவர் அய்யாவின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பேரூந்து நிருத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், மதுவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன கோசங்கலை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் எம்.ஜே.எம்.சேட் , முத்துப்பாண்டி, வெற்றிவேல், வைரமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

Translate »
error: Content is protected !!