மனித நேய மக்கள் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவிகள்

கொரோன 2வது அலையால் பாதிப்படைந்தவர்களுக்கு 1 மாதத்திற்கான அரிசி பருப்பு பல சரக்கு பொருள்களும் 100 குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

மத்திய சென்னை மாவட்டம்  மனித நேய மக்கள் கட்சி எழும்பூர் பகுதி 61 வட்டம் சார்பாக கொரானா நிவாரண உதவி பொருட்கள் &கபசூர குடீநீர் வழங்கும் நிகழ்ச்சி புதுப்பேட்டை வேலாயுதம் தெருவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தலைவர் ஜவாஹிருல்லா மாநிலத்தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கி 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை ஜே ஷா அப்துல் ஹமீத், மாஸ் ஹோட்டல் சாகுல் ஹமீது, செய்து இருந்தனர். மனிதநேய மக்கள் கட்சி மத்திய சென்னை எழும்பூர் தொகுதி மாவட்ட பகுதி புதுப்பேட்டை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Translate »
error: Content is protected !!