திருவாடானையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம்; திருவாடானையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாளையொட்டி இன்று பெரிய மாடு, கரிச்சான் என இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயம் தொண்டி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து தளிர் மருங்கூர் விளக்கு வரை வரை எல்கை நிர்ணயம் செய்து பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பெரியமாடு மற்றும் சின்னமாடு ஜோடி என 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இரண்டு கட்டமாக நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாட்டு வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை பார்க்க வெளியூர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தார்கள்.