மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் கர்நாடக முதல்வர் – திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மையை கொளுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன் ஒன்றிய தலைவர் எஸ்.வி.கே.வீரசேகர் துணைத்தலைவர் ரத்தினசாமி பாலசுப்பிரமணியன் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!