மே 1, 2 ஆம் தேதி முழு ஊரடங்கா..?

மே 1,2 ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28ல் வெளியிட வேண்டும். மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!