ரஜினியின் அறிவிப்பை கேட்ட ரசிகன் ரஜினியின் பேனரை எரித்து திட்டுனார்

ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் என்பவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நந்தி கோயில் தெருவில் ரஜினி பேனரை எரித்து கோபத்துடன் திட்டிவிட்டு சென்றார்.

 ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது அரசியலுக்கு வருவார் என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பை கேட்டு தமிழகத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் இதனால் ரஜினி ரசிகர்கள் சோகத்துடன் செய்வதறியாமல் இருந்து வந்தனர்.

 இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ரசிகர்கள் பலரும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஏமாற்றத்துடன் காணப்பட்டாலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆண்டாள் தெருவில் வசிக்கும் ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் என்பவர் ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்து ஆத்திரம் தாங்காமல் நந்தி கோயில் அருகே ரஜினியின் பேனரை எரித்து ரஜினி இத்தனை காலம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை கேட்டு பெரும் ஏமாற்றம் அடைந்ததாகவும் இதனால் கடுமையான சொற்களால் ரஜினிகாந்தை திட்டி பேனரை எரித்து விட்டு சென்றார்.

Translate »
error: Content is protected !!