ராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் காரைக்குடி மண்டலம் சார்பில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் ராமநாதபுரம் மாவத்தில் உள்ள முக்கிய பேருந்து பணிமனைகளில் இந்தப் போராட்டமானது நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள போக்குவரத்து ஊழியர்கள்  தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களை அழைத்து பேசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்தப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

Translate »
error: Content is protected !!