வடமாநில வாலிபரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை பட்டாபிராமில் வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி கேமராவின் உதவியால் கைது செய்தனர்.

உ.பி மாநிலம், ஷாமிலி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நோமன்கான் (வயது 34). சென்னை பூந்தமல்லி பகுதியில் தங்கிருந்து, வீடுவீடாக சென்று வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 22ம் தேதியன்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது நண்பர் குல்ப் நவாஸ் என்பவருடன் சேர்ந்து பட்டாபிராம், அண்ணா நகர் முதல் தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்குகளில் டிரிப்ஸ் வந்த 6 பேர் கும்பல்கத்தியைக்காட்டி மிரட்டி அவர் மற்றும் அவரது நண்பரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் பணம் ரூ. 35 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து நோமன்கான் பட்டாபிராம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு நோமன்கானிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாபிராமைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 24), பெஞ்சமின் (எ) அர்ஜுன் (வயது 21), அருண்குமார் (22), ஹரிஷ்குமார் (26), சதீஷ் (24), விக்னேஷ்வரன் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைதான 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!