விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த் – கவிஞர் வைரமுத்து இரங்கல்

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில்,

வருந்துகிறேன் நண்பா!

திரையில்

ஒளிகொண்டு

சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை

ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்

எத்தனையோ பாடல்களை

ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ

உனக்கான இரங்கல்பாட்டை

எங்ஙனம் படம் செய்வாய்?

 விதவையான கேமரா

கேவிக்கேவி அழுகிறது

கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்

இனி நீ.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 
Translate »
error: Content is protected !!