விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விருது – விளையாட்டில் சாதனைபுரிந்த பெண்மணிக்கு சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தை சார்ந்த விளையாட்டு சாதனை புரிந்த பெண்கள் அதற்கான சான்றுகளுடன் இந்த விருதினை பெருவதற்கான விண்ணப்பங்களை 28.06.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.