அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 10 லட்சம் ரூபாய், 60 சவரன் நகைகள் கொள்ளை

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 லட்சம் ரூபாய் மற்றும் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டை எடையர் தெருவில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுத்தானந்தன். இவர் தனது குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வீட்டை பூட்டிவிட்டு அரக்கோணத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்கள் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!