100 கோடி தடுப்பூசி போட்டு சீனா உலக சாதனை

சீனாவில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முதல் சுற்றில் 71 சதவீதம் மக்களுக்கும், இரண்டாவது சுற்றில் 22 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியும், சோசலிச சமூக முறையும்தான் இதற்கு காரணம் என அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும் சீன நாட்டின் மருத்துவத்துறை அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதும்தான் சீனாவின் இந்த வியத்தகு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு காரணம் என அந்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!