12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பு

12ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்திற்காக ஜூன் மாதம் தண்ணீர் திறந்து சரித்திர சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் .பெரியசாமி பேட்டி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து  பெரியாறு பிரதான கால்வாய் பகுதியின் முதல் போக  பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் .பெரியசாமி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வைகை அணையின் 7பெரிய மதகுகள் வழியாக   தண்ணீர் திறந்து வைத்தனர். முன்னதாக அணையில் பூஜை வழிபாடு செய்யப்பட்டது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர்

இன்று முதல் 45நாட்களுக்கு விநாடிக்கு 900கன அடி வீதமும், அடுத்த 75நாட்களுக்கு முறை வைத்தும் 6,739மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் வடக்கு தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள 45,041 ஏக்கர் பாாச வசதி அடைகின்றன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் .பெரியசாமி கூறுகையில், 12ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்தும், 14ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும்  ஜூன் மாதத்தில்  முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது.

மேலும்  வைகை அணையை தூர்வாப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு கடைமடை பகுதியான ராமேஸ்வரம் வரை வைகை அணை  தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகழிவுநீர் கலப்பது, மணல் திருட்டு உள்ளிட்டைவைகள் தவிர்கப்பட்டு நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். கடந்த 2006 – 11வரையிலான  திமுக ஆட்சியில் தமிழகத்தில் மணல் திருட்டு ஏதும் நடைபெறவில்லை எனக் கூறினார். இந்நிகழ்வில் தேனி, மதுரைதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Translate »
error: Content is protected !!