ஒரே நாளில் 14,148 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 14 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் பாதிப்பு விகிதம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 302 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று மட்டும் 30 ஆயிரத்து 9 பேர் தொற்று நீங்கி குணமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!