மரு‌த்துவமனை‌யி‌ல் 150 படுக்கைகள் தயார்


செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 60 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், பெரியவர்களுக்கான 40 படுக்கைகள் கொண்ட தனி வார்டும் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்காக 30 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!