16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

இதில் 16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!