16 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்

சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை, தண்டையார்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக போலீசாருக்கு சைல்டு ஹெல்ப்லைன் மூலம் ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்றனர். அங்கு 16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைத்தல் சட்டப்படி குற்றம், என்று பெற்றோருக்கு அறிவுரை கூறி சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாப்பிள்ளை வீட்டாருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Translate »
error: Content is protected !!