16 வயது சிறுமியிடம் ‘பலான சேஷ்டை’: தாத்தாவுக்கு காப்பு

சென்னை அண்ணாநகரில் 16 வயது பேத்தியிடம் தகாத முறையில் நடந்த தாத்தாவை மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளினர்.

சென்னை, அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமானுஜம் (வயது 62). அவரது வீட்டில் அவரது பேத்தி உறவான உறவுப் பெண் 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ளார். அப்போது சிறுமியிடம் ராமானுஜம் தகாத முறையில் நடந்துள்ளார். இது குறித்து சிறுமியின் சார்பில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமானுஜத்தை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!