தமிழகம் முழுவதும் 14 அரசுத் துறைகளின் 33 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு, பதிவுத்துறை, வணிக வரி, போலீஸ், டாஸ்மாக் உள்ளிட்ட 14 பிரிவுகளில் சோதனை நடத்தப்பட்டது.
தீபாவளியையொட்டி லஞ்சம், பரிசு பெறப்படுகிறதா என அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும், கணக்கில் வராத ரூ.18,20,030 ரொக்கம், ரூ.6,47,180 மதிப்புள்ள மதுபாட்டில்கள், 36 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.