புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறைத் தலைமை காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்களை போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், புதுக்கோட்டை நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர், திருப்புனவாசல் தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் இவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததையடுத்து, இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரண் சுந்தர் உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!