சிவசங்கர் பாப்பா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு

சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 2 வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மேலும் பாதிக்கப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாப்பா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகளும், ஒரு பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளும் என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!