57 லட்சம் பேர் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை – அமைச்சர் மா.சு தகவல்

சென்னை கிண்டியில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாட்டில் இதுவரை 57 லட்சம் பேர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி முகாமில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தமிழகத்தில் இதுவரை 340 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!