ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்: ஓபிஎஸ்

கோவை,

ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்று .பன்னீர்செல்வம் பேசினார்.

கோவையில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் பேசியது, 

ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு உதவி செய்து தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அண்ணா தி.மு.. மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார்.

பாரதீய ஜனதாஅண்ணா தி.மு.. கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளாக இருந்த தி.மு.. – காங்கிரஸ் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டும்.

 

Translate »
error: Content is protected !!