நடிகர் ரஜினிகாந்தின் திருமண நாளையொட்டி, ராமநாதபுரத்தில் மும்மத வழிபாடு

ரஜினிகாந்த்லதா ரஜினி தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மும்மத வழிபாடு:

முதல்கட்டமாக உத்தரகோசமங்கையில் பத்தாயிரம் தீப வழிபாட்டை தொடக்கிவைத்தார் அவருடைய மூத்த  சகோதரர்  சத்தியநாராயணன் கெய்க்வாட்;

நடிகர் ரஜினிகாந்த் தாம் இனி எந்த அரசியல் நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, கட்சியும் தொடங்க போவதில்லை,. எனவே தமிழக மக்களும் எனது ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுவிட்டு அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்ட நிலையில்,

அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தினர் அவ்வப்போது அவருக்கு விழா எடுத்தும் வாழ்த்துக் கூறியும் தங்களை நினைவுபடுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த்லதா ரஜினிகாந்த் தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் மும்மத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அதில், உத்தரகோசமங்கை கோவிலில் இந்து முறைப்படி வழிபாடு செய்யவும், ஏர்வாடி தர்காவில் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்தி துவா செய்யவும், ஓரியூர் சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி வேண்டுதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், முதல் வழிபாடாக இன்று அதிகாலையிலேயே ராமநாதபுரத்தை அடுத்த திருஉத்தரகோசமங்கை யிலுள்ள சிவாலயத்திற்கு வந்த நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர்சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்‘ 10000 தீபவழிபாட்டையும் லட்சார்ச்சனையும் தொடக்கிவைத்தார்.

இதற்காக மாவட்டத்திற்கு வந்த அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டேன் என்று கூறிவிட்டாலும் கூட அவருடைய மூத்த சகோதரர் அவ்வப்போது ரஜினி மக்கள் மன்றத்தை சந்தித்தும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.

Translate »
error: Content is protected !!