போலீஸ் கமிஷனருக்கு விருந்து அளித்த ஆற்காடு இளவரசர்

சென்னை, 

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நேற்று குடும்பத்துடன் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ராயப்பேட்டை அமீர்மகாலில் நடந்த இந்த சந்திப்பில் ஆற்காடு இளவரசர் மற்றும் பேகம் சயீதா அப்துல் அலி ஆகியோர் கமிஷனர் மற்றும் அகர்வால் அவர்களுக்கு இரவு விருந்தளித்தனர்.

அப்போது போலீஸ் கமிஷனரின் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்காடு இளவரசர் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் அமீர் மகாலுக்கு வருகை தந்த கமிஷனர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு நவாப்ஸாதா முகமது ஆசிப் அலி மற்றும் பேகம் சீமா ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

Translate »
error: Content is protected !!