மீண்டும் முழு லாக்டவுனா…! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் முழு லாக்டவுன் போடப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 95.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்திற்கு இதுவரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ளன. 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

மாநிலம் முழுவதும் 34 லட்சத்து 87 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். இதில் சேலத்தில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கொரானா தொற்று தற்போது வேகமாக பரவிவரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றினால் முழு லாக்டவுன் வராது. ஆனால் கொரானா தொற்று அதிகரித்தால் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து லாக்டவுன் குறித்து அரசு முடிவெடுக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த மார்ச் 11 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!