சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்ற நபர் கைது

பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்து இலங்கைக்குச் செல்ல ராமேஸ்வரம் வந்த திலீப்நாராயணன் (43) போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பங்களாதேஷ் பிரம்மன்பளியாவைச்சேர்ந்தவர் என்.திலீப்நாராயணன் (43) இவர் கொரோனா பரவலுக்குமுன்புவரை 8 ஆண்டுகளாக இலங்கையில் வேலை பார்த்ததாகவும் அங்கிருந்து தனது குடும்பத்தினரைச்சந்திக்க  பங்களாதேஷ் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.

ஆனால் சரியான வேலைவாய்ப்பு  கிடைக்காததால் மீண்டும் இலங்கை செல்வதற்கு முடிவுசெய்து சட்டவிரோதமாக கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் வந்ததாகவும் இலங்கைக்குச் செல்வதற்காக  நேற்று ராமேஸ்வரம் வந்து மர்மப்பபடகு ஏஜெண்டுகளை தொடர்புகொண்டு

அவர்களது ஆலோசனைப்படி தனுஷ்கோடி சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையில் படகுக்காக காத்திருந்தபோது சந்தேகத்தின் பேரில் அங்குள்ள மீனவர்கள் எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் திலீப்நாராயணனை பிடித்து தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!