திமுக இளைஞரணி பிரமுகர் வெட்டிக்கொலை- பதற்றம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் என்கிற பாலசந்திரன், 32 இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அவரது வீட்டின் அருகே, இன்று மாலை 6 மணியளவில் இந்த படுகொலை நடந்தது. வீட்டின் அருகே பாலசந்திரன் இருந்த போது, 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், ஆயுதங்களுடன் அங்கு வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் பாலசந்திரனை கன்மூடித்தனமாக தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிரிழந்தார்.

வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் என்கிற பாலசந்திரனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!