தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி ஆறுதல் கூறினார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்.