ஆங்கில நாளிதழின் மூத்த செய்தியாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை நகரில் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த ஆஸ்பின் கொரோனாவால் இன்று உயிரிழந்தார்.

நாகர்கோயிலை பூர்வீகமாக கொண்டவர் ஆஸ்பின். இவர் ஆஸ்பின் மூச்சுத்திணறல் காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாரம் முன்பு சேர்ந்தார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கையில் சில வருடங்களுக்கு முன் துணை ஆசிரியர் பதவில் சேர்ந்தார். மிகவும் சிறப்பாக பணியாற்றினார்.  

இதற்கு முன்பு அவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை, தி ஹிந்து, சென்னை மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை ஆகிய பத்திரிகைகளில்  பணியாற்றியுள்ளார். ஏற்கனவே இந்து பத்திரிகையயின் நிருபர் பிரதீப் பலியான நிலையில் இன்று இரண்டாவது பலியாக ஆஸ்பின் உயிரிழப்பு பத்திரிகை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!