தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 5வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.

பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 475 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 4, 268 பேருக்கும், சென்னையில் 3,561 பேருக்கும், திருப்பூரில் 1,880 பேருக்கும், திருச்சியில் 1,755 பேருக்கும், ஈரோட்டில் 1,642 பேருக்கும், மதுரையில் 1,538 பேருக்கும், திருவள்ளூரில் 1,181பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 10ஆயிரத்து 224 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!