கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சுமார் எழுபத்திஐந்துஆயிரம்  மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம் ,கொடைக்கானல் ஆர்டிஓ சிவகுமார்,

கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன் ஆகியோர் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பொன் ரதியிடம்  வழங்கினார்கள். இதேபோன்று கொடைக்கானல் தனியார் மருத்துவமனைக்கும் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தாவூத், நாட்ராயன் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!