கொரோனாவால் பாதித்த காவலர் குடும்பத்தினரை நேரில் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை நகரில்  கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்

சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில்  ஆயுதப்படை தலைமை காவலர் சதீஷ் பாபு (49) என்பவர் கொரோனா தொற்று காரணமாக  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கீழ்பாக்கத்தில் சதீஷ்பாபுவின் இல்லத்தில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கினார்.

தலைமை காவலர் சதீஷ் 14.05.2021-ம் தேதி கொரானா தொற்று ஏற்பட்டு கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது இல்லம் தேடி வந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காவல் ஆணையர் ஆறுதல் தெரிவித்தும் காவல்துறை சார்பில் மேலும் தொடர்ச்சியாக உதவி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஆயுதப்படை துணை ஆணையர் சவுந்தரராஜன் உடன் இருந்தார்.

Translate »
error: Content is protected !!