வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. இன்று பல வகை விலங்குகள் உள்ளன. கொரோனா 2ஆம் அலை காரணமாக இப்பூங்கா மூடப்பட்டது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!