தீ விபத்திலிருந்து 36 குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது 36 பச்சிளங்குழந்தை மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை,

கடந்த மாதம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில்  இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு 36 பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்கள் இருந்தனர். செவிலியர் ஜெயக்குமார் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் ,தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார். இந்த செய்தியை அறிந்த முதல்வர் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Translate »
error: Content is protected !!