ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள் ஆன்லைனில் தொடரும்..!

வரும் 14ம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள் ஆன்லைனில்  தொடரும்.

14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு சார்பில் ஆஜராக மேலும் 44 வழக்கறிஞர்களை நியமித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!