கொடைக்கான‌லில் ச‌த‌ம‌டித்த‌  பெட்ரோல் விலை.. பொதும‌க்க‌ள் அதிர்ச்சி…!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ட்டுமானபொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக  பெட்ரோல் விலை 102.59 ஆகவும் டிசல்  93.70 ரூபாய்க்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால்  தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் .மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .

Translate »
error: Content is protected !!